இன்றைய சிந்தனைக்கு
01.05.18
இன்றைய சிந்தனைக்கு
பெருந்தன்மை:
பெருந்தன்மை திருப்தியை கொண்டுவருகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நம்முடைய வளங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது இயற்கையானது.
இருப்பினும், நாம் ஏதாவது கொடுக்கும்போது, நாம் எதிர்பார்ப்பதிலிருந்து
விடுபட்டிருப்பதில்லை. நாம் கொடுத்ததை ஈடுகட்டும் அளவிற்கு
மற்றவர்களிடமிருந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் மனப்போக்கு உள்ளது. நாம்
கொடுத்ததை போன்றே மற்றவர்களிடமிருந்து எப்போதும் நாம் பெறுவதில்லை.
ஏமாற்றம் தொடர்கின்றது.
செயல்முறை:
உண்மையான பெருந்தன்மை திருப்தியை கொண்டுவருகின்றது. கொடுப்பதில் சந்தோஷம்
உள்ளது என்ற உண்மையை நான் பாராட்டுவது அவசியம். கொடுக்கக்கூடிய தன்மையை
என்னால் சந்தோஷமாக அனுபவம் செய்ய முடியும்போது, அதுவே வரவிற்கான ஆதாரமாக
ஆகின்றது. மேலும் எனக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளில் நான்
சிக்கிக்கொள்ளவில்லை. கொடுப்பது என்பது என்னிடத்தில் உள்ளதை பாராட்டுவதோடு
அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதாகும்
02.05.18
இன்றைய சிந்தனைக்கு
தெளிவு:
தெளிவு உள்ளவர், வெற்றியுடன் இருக்கின்றார்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நம் மனதில் நிலையான நோக்கம் இருக்கும்போதும், நம்மை சுற்றி நடப்பவையால்
நாம் கவனம் இழக்கின்றோம். ஒரு சிறு எதிர்மறையான அல்லது ஆக்கபூர்வமான
நிகழ்வு நம்முடைய எண்ணங்களை திசைதிருப்ப போதுமானதாக இருக்கிறது. நாம் சில
நேரங்களில் மிகவும் மும்முரமாக இருப்பதால், நம்முடைய பார்வையானது, மேக
மூட்டமுடையதாக, அதாவது தெளிவற்று இருக்கிறது. இதனால் நாம் மேற்கொண்டு
முன்னோக்கி செல்வது நின்றுவிடுகிறது.
செயல்முறை:
நான் சாதிக்க நினைப்பதை, மனக்கண்களால், நான் கற்பனை செய்து பார்ப்பது
அவசியம். மேலும், நான் என் குறிக்கோளை அடையும் வரை, எனக்கு நானே அதை
நினைவூட்டிக்கொள்ள வேண்டும். அந்த காரியத்தை செய்து முடிக்க தேவையான,
முக்கியமானவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதால், நான் விரைவாக வெற்றி
பெறுவேன். மற்ற முக்கியமல்லாத விஷயங்களில் என் கவனம் சிதறாது.
03.05.18
இன்றைய சிந்தனைக்கு
பொறுமை:
திடமான நோக்கம் என்பது, முயற்சியின் பலனை பெற பொறுமையோடு காத்திருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் புதிதாக ஒரு காரியத்தை செய்யவேண்டும் என்று எடுத்துக்கொள்ளும்போது,
நாம் திடமான எண்ணத்தோடு இருக்கின்றோம். மேலும், இறுதிவரை சிறப்பானவற்றை
கொடுக்க வேண்டும் என்றும் விரும்புகின்றோம். இருந்தபோதிலும், நாம் அதில்
சுவாரசியம் இழந்து, முதலில் நாம் தேர்ந்தெடுத்ததை விட்டுவிட்டு, மற்றொரு
புதிய காரியத்தை மேற்கொள்கின்றோம். இது மென்மேலும் அதிகரிக்கும்போது, நாம்
வெற்றி பெறுவது சிரமமாகிவிடுகிறது.
செயல்முறை:
நான் ஒரு காரியத்தை துவங்கும்போது, திடமான நோக்கத்துடன், பொறுமையும் எனக்கு
அவசியம். பொறுமையானது, காத்திருந்து, நான் செய்த முயற்சியின் பலனை
அமைதியாக, உற்று நோக்க எனக்கு உதவி செய்கிறது. திடமான நோக்கம் என்பது,
நிச்சயம் பலன் கிடக்கும் என்பதை அறிந்து, மேற்கொண்டு முயற்சிக்கான புதிய
விதைகளை விதைக்க எனக்கு ஆற்றலை வழங்குகிறது. அதனால், ஒருபோதும் தோல்வி
என்பது இல்லை, ஆனால், இது வெற்றியை எதிர்நோக்கும் ஒரு பயணமாகும்.
04.05.18
இன்றைய சிந்தனைக்கு
வளைந்து கொடுக்கும்தன்மை:
வளைந்து கொடுக்கத் தெரிந்தவரே, பிழைக்கத் தெரிந்தவர்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
பெரும்பாலும், நாம் ஒரு மனிதரிடமோ அல்லது சூழ்நிலையிலோ வளைந்து கொடுக்க
நேரிடும் போது, நாம் அதிகமான எதிர்மறையான எண்ணங்களை அனுபவம் செய்கின்றோம்.
இது நமக்கு சிரமமாக இருக்கிறது. மேலும், இவ்வாறு நாம் வளைந்து கொடுப்பது
மற்றவர்களின் நன்மைக்காக என்று நாம் உணரும் போக்கு நம்மிடம் உள்ளது.
செயல்முறை:
வளைந்து கொடுப்பது என்றால், அந்த சூழ்நிலையை மாற்றுவதற்கு வேறு எதுவும்
செய்ய இயலாது என்பதை புரிந்து கொள்வதாகும் – அதை ஏற்றுக்கொள்வது,
விவேகமானதாகும். மற்றவர்கள் நன்மையடைவார்கள் என்பதால் நான் வளைந்து
கொடுக்கவில்லை, ஆனால், எதிர்காலத்தில் நான் நன்மையடைவேன். ஸ்தூலமாக என்னால்
ஒன்றைத் தாண்டி செல்ல முடியாமல் இருக்கும் போது, என்னால் அதை
விலக்கமுடியாது, அதனால், நான் முன்னேற வேண்டுமானால், அதை கடந்து
செல்லவதற்கான வழியை கண்டுபிடிக்கவேண்டும்.
05.05.18
இன்றைய சிந்தனைக்கு
விவேகம்:
வாழ்க்கையில் வரும் பரிட்சைகளுக்கு தயாராக இருப்பதே, விவேகத்தோடு இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
பொதுவாக, நாம், வாழ்க்கையில் வரும் பரிட்சைகளுக்கு, அதை எதிர்நோக்கிய பிறகே
தயாராகின்றோம். அதன் பிறகு நாம் எவ்வளவு கடினமான முயற்சி செய்தாலும்,
நம்மால் முழுமையாக தயார் நிலையை அடைய முடியவில்லை. அதனால், முன்னேற்றத்தை
அனுபவம் செய்வது கடினமாக இருக்கிறது. எதிர்பார்த்து, முன்கூட்டியே தயார்
நிலையில் இருப்பது என்பது, உள்ளார்ந்த வளங்களை நன்கு பயன்படுத்துவதாகும்.
செயல்முறை:
தொடர்ந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்றால், நான் முன்கூட்டியே சிறப்பான
முறையில் தயாராக இருப்பது அவசியம். என்னுடைய கடந்த கால அனுபவங்களிலிருந்து
நான் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தால் மட்டுமே, என்னால் இவ்வாறு தயாராக
இருக்கமுடியும். இந்த உள்ளார்ந்த தயார் நிலையினால், வாழ்க்கையில் வரும்
பரிட்சைகள் அனைத்தையும் என்னால் எதிர்நோக்கமுடியும். தற்போதைய சூழ்நிலையை
கையாள, எனக்கு வேண்டிய அனைத்து ஆயுதங்களும் என்னிடம் இருக்கிறது.
06.05.18
இன்றைய சிந்தனைக்கு
பகுத்தறிதல்:
வாழ்க்கை நாடகத்தை பாராட்டுவது என்பதென்றால், தொடர்ந்து சந்தோஷமாக இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
அனைத்தும் சுமூகமாக செல்லவேண்டும் என்னும் எதிர்பார்ப்பில் நாம் ஒவ்வொரு
நாளையும் தொடங்குகிறோம். உண்மையில், எதுவும் தவறாக செல்வதை நாம்
விரும்பவில்லை. மேற்கொண்டு, அவ்வாறு நடக்கும்போது, எதிர்மறை எண்ணங்கள்
என்னும் புயலினால் நாம் தாக்கப்படுகின்றோம். இப்படிபட்ட எண்ணங்கள், நாளின்
பிற்பகுதியை, நாம் சந்தோஷமாக கழிப்பதிலிருந்து நிறுத்திவிடகூடும்.
செயல்முறை:
வாழ்க்கை நாடகம் மிகவும் அழகானது என்பதை நான் புரிந்துக்கொள்வது அவசியம்.
ஒவ்வொரு நாளும் வித்தியாசமானது, மேலும், விசேஷமான ஒன்றை அது
வழங்கவிருக்கிறது. ஒவ்வொரு நாளும் தனித்துவமானது என்பதை நான் பாராட்ட
கற்றுக்கொண்டவுடன், என் வழியில் வரும் எதையும் என்னால் இரசிக்க
முடிகின்றது.
07.05.18
இன்றைய சிந்தனைக்கு
அகத்தாய்வு:
நன்றாக சிந்திப்பது என்றால், தீர்வு காண்பது என்தாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் பிரச்சனைகளை சந்திக்கும்போது, தீர்வு காண கடினமாக முயற்சிக்கின்றோம்.
தீர்வு சுலபமாக கிடைக்கவில்லை என்றால், கடினமாக சிந்திக்கும் போக்கு
நம்மிடம் உள்ளது. நாம் எதிர்நோக்கும் பிரச்சனையில் நாம் மூழ்கியிருப்பதால்,
நம் சிந்தனையானது, அதனைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. சிந்தனை
அதிகமாக இருக்கும்போது, நாம் தீர்வு காண்பது சாத்தியமல்ல.
செயல்முறை:
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு, என்னுடைய சிந்தனையின் தரத்தை
உயர்த்திக்கொள்வது முக்கியமானதாகும். அமைதியான எண்ணங்களை உருவாக்குவதன்
மூலம், மனதை சாந்தமாக வைத்திருப்பது அவசியம். இதனை தெடர்ந்து, பிரச்சனைகள்
என்னை பாதிப்பது நின்றுவிடுகிறது. என்னால், தெளிவாக சிந்திக்க முடிகின்றது.
இது தீர்வைக் கொண்டுவருகிறது.
இன்றைய சிந்தனைக்கு
உண்மை:
உண்மையை அனுபவம் செய்வதென்றால், அதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துவதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் ஒரு பயனுள்ள கருத்தை புதிதாக கேட்கும்போது, இயற்கையாகவே, அதனை நம்
வாழ்க்கையில் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால், அதனை
நடைமுறைப்படுத்தும் ஊக்கம், மிக விரைவில் மறந்துவிடுகிறது. சிறிது
காலத்திற்கு பிறகு, அக்கருத்தை, ஒரு தத்துவமாக நினைவு செய்கின்றோமே தவிர,
அதனை நடைமுறைப் படுத்தும் உற்சாகமில்லை. அதனை நடைமுறைப்படுத்தும், தைரியம்
நம்மிடமில்லை அல்லது நம்முடைய கடந்தகால அனுபவத்தினால் நாம் மனச்சோர்வு
அடைந்திருக்கிறோம்.
செயல்முறை:
என்னுடைய வாழ்க்கையில் புதிதாக ஒரு அம்சத்தை கொண்டுவர விரும்பும்போது,
அதற்காக நான் ஒரு இடத்தை என் மனதில் உருவாக்கி கொள்ள வேண்டும். நான் கொண்டு
வரவிருக்கும் மாற்றத்தினால், என்னுடைய வாழ்க்கையானது எவ்வாறு
இருக்குமென்று நான் கற்பனை செய்து பார்க்கும்போது, அதை நடைமுறைப்படுத்த
நான் ஆரம்பிக்கிறேன். சிறிது சிறிதாக என்னுடைய தைரியம் வளர்கிறது. உண்மை
என்னை வலிமையாக்குகிறது. மேலும், எனக்கு பயனளிக்கும் வகையில் என்னுடைய
வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்வதில் நான் வெற்றியடைகின்றேன்.
09.05.18
இன்றைய
சிந்தனைக்கு
எளிமை:
எளிமையாக
இருப்பதென்றால், உண்மையில்,
இராஜரீகமாக
இருப்பதாகும்.
சிந்திக்க
வேண்டிய
கருத்து:
எளிமை
என்பது, பொதுவாக,
அலங்காரமின்றி,
சாதாரணமாக
இருப்பது
என்று
கருதப்படுகிறது.
அதனால், எளிமையைப்
பற்றி நாம்
சிந்திக்கும்போது,
பெரும்பாலும்
நாம் அதனால்,
கவரப்படுவதில்லை.
மற்றவர்களை
கவரத்தக்க வகையில்
இருக்க நாம்
அதிகமான
முயற்சி
செய்பவர்களாக
இருக்கின்றோம்.
ஆனால், நடைமுறையில்
நம்முடைய
உள்ளார்ந்த
தூய்மையையும்
கள்ளங்கபடமற்ற
தன்மையையும்
நாம் இழந்துவிடுகின்றோம்.
அதனால், நம்முடைய
சொந்த
உண்மையான
அழகை
வெளிப்படுத்த
முடியாமல்
இருக்கிறோம்.
செயல்முறை:
எளிமை
என்றால், முழுமையான
தூய்மையாகும்.
அகந்தையற்று,
அனைத்து
விதமான எதிர்மறைத்தன்மையிலிருந்து,
விடுபட்டு
இருப்பதாகும்.
அதனால், என்னுடைய
இயற்கையான
எளிமைக்கு
நான் திரும்பும்போது,
என்னுடைய
சொந்த
அழகையும்
பலத்தையும்
என்னால்
வெளிப்படுத்த
முடியும்.
12.05.18
இன்றைய சிந்தனைக்கு
திருப்தி:
திருப்தியுடன் இருக்கும் ஒருவர், தானும் பாதிக்கப்படுவதில்லை, மற்றவர்களையும் பாதிப்படையச் செய்வதில்லை.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நான் மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது என்று சிந்தித்தாலும், அநேகமான முறை, நான் பேசும் வார்த்தைகள், செயல்கள் அல்லது நடத்தையானது மற்றவர்களை பாதிப்படையச் செய்கிறது. சூழ்நிலையைப் பற்றி நான் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன், ஆனால் மற்றவர்கள் அவ்வாறு இல்லை. இப்படிப்பட்ட நேரங்களில், என்னால் காரணத்தை புரிந்துக்கொள்ள முடிவதில்லை. மேலும், மற்றவைகள் நியாயமாக இல்லை என்று கருதுகின்றேன்.
செயல்முறை:
மற்றவர்கள் என்னிடம் திருப்தியற்று இருக்கும்போது, என்னை நான் சோதிப்பது அவசியம். தொடர்ந்து என்னை நான் சோதித்து, மாற்றிக்கொள்ளும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலம், காலத்திற்கு ஏற்ப, நான் முன்னோக்கிச் செல்ல முடியும். இது உண்மையான, திருப்தியைக் கொண்டுவரும் – இந்தவிதமான திருப்தியினால், நானும் பாதிப்படைவதில்லை மற்றவர்களும் பாதிக்கப்படுவதில்லை.
10.05.18
இன்றைய
சிந்தனைக்கு
சுய
– கட்டுப்பாடு:
உண்மையான
கட்டுப்பாடு
என்றால், சுயத்தை
ஆள்பவர்களாக
இருப்பதாகும்.
சிந்திக்க
வேண்டிய
கருத்து:
பொதுவாக, நாம்
வெளிப்புற
சூழ்நிலைகள்
சரியாக
இருக்க
வேண்டும்
என்று
எதிர்ப்பார்க்கின்றோம்.
அனைத்தும், நாம், சரி
எது, தவறு எது
என்று
சிந்திக்கின்றோமோ, அதன்படி
அனைத்தும்
சரிவர
இருக்கவேண்டும்
என்று நாம்
விரும்புகின்றோம்.
அது அவ்வாறு நடக்காதபோது, நாம்
அமைதியிழக்கும்
போக்கு
உடையவர்களாக
இருக்கின்றோம்.
நம் மனதை நாம்
கட்டுப்பாட்டில்
வைத்திருக்க
நம்மால்
இயலவில்லை. இது
எதிர்மறையான
சூழ்நிலையை
மேலும் மோசமாக்கக்கூடும்.
மேலும், பிரச்சனைக்கு
தீர்வு
காண்பது, கடினமாகும்.
செயல்முறை:
என்னை
நான் மதித்து, என்னுடைய
ஆற்றலை
உணரும்போது, என்னுடைய
மனதை என்னால், கட்டுப்படுத்த
முடிகிறது.
ஒரு அரசர், இராஜாங்கத்தை
ஆள்வதுபோல், என்னை
நான்
ஆள்கின்றேன்.
இது
வெளிப்புற
சூழ்நிலைகளை
கட்டுப்பாட்டில்
வைத்திருக்க
உதவுகிறது.
இது, நடக்கும்
அனைத்திற்கும்
பின் இருக்கும்
காரண
காரியத்தை
பார்க்க
வைக்கிறது.
அதனால், நான்
மனச்சோர்வு
அடைவதில்லை.
11.05.18
இன்றைய சிந்தனைக்கு
அமைதி:
அமைதியை அனுபவம் செய்வதென்றால், மற்றவர்களுக்கு அமைதியின் அனுபவத்தை கொடுப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் அமைதியின்மையை அனுபவம் செய்யும்போது, பொதுவாக மற்றவர்களை குற்றம்
சாட்டுகின்றோம். மற்றவர்களோ அல்லது சூழ்நிலையோ நம்மை அமைதியிழக்க
வைத்துவிட்டதாக நாம் கருதுகின்றோம். நமக்கு இந்த மனநிலை பிடிக்கவில்லை
என்றால்கூட, அதை மாற்றுவதற்கு நாம் அதிகமாக முயற்சி செய்வதில்லை. நம்முடைய
சொந்த திருப்தியின்மையால், நம்மைச் சுற்றியுள்ளவர்களும், அமைதியின்மையை
அனுபவம் செய்வார்கள்.
செயல்முறை:
சூழ்நிலையை மாற்றுவதற்கு, முதலில் நான் ஏன் அமைதியற்று இருக்கின்றேன்
என்பதை கவனிக்க வேண்டும். என்னுடைய உள்ளார்ந்த கருத்து வேற்றுமையை நான்
நிவர்த்தி செய்யும்போது, நான் மீண்டும் அமைதி அடைவேன். மேலும், இந்த
அனுபவத்தை மற்றவர்களுடன் என்னால் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
11.05.18
இன்றைய சிந்தனைக்கு
அமைதி:
அமைதியை அனுபவம் செய்வதென்றால், மற்றவர்களுக்கு அமைதியின் அனுபவத்தை கொடுப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் அமைதியின்மையை அனுபவம் செய்யும்போது, பொதுவாக மற்றவர்களை குற்றம்
சாட்டுகின்றோம். மற்றவர்களோ அல்லது சூழ்நிலையோ நம்மை அமைதியிழக்க
வைத்துவிட்டதாக நாம் கருதுகின்றோம். நமக்கு இந்த மனநிலை பிடிக்கவில்லை
என்றால்கூட, அதை மாற்றுவதற்கு நாம் அதிகமாக முயற்சி செய்வதில்லை. நம்முடைய
சொந்த திருப்தியின்மையால், நம்மைச் சுற்றியுள்ளவர்களும், அமைதியின்மையை
அனுபவம் செய்வார்கள்.
செயல்முறை:
சூழ்நிலையை மாற்றுவதற்கு, முதலில் நான் ஏன் அமைதியற்று இருக்கின்றேன்
என்பதை கவனிக்க வேண்டும். என்னுடைய உள்ளார்ந்த கருத்து வேற்றுமையை நான்
நிவர்த்தி செய்யும்போது, நான் மீண்டும் அமைதி அடைவேன். மேலும், இந்த
அனுபவத்தை மற்றவர்களுடன் என்னால் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.12.05.18
இன்றைய சிந்தனைக்கு
திருப்தி:
திருப்தியுடன் இருக்கும் ஒருவர், தானும் பாதிக்கப்படுவதில்லை, மற்றவர்களையும் பாதிப்படையச் செய்வதில்லை.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நான் மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது என்று சிந்தித்தாலும், அநேகமான முறை, நான் பேசும் வார்த்தைகள், செயல்கள் அல்லது நடத்தையானது மற்றவர்களை பாதிப்படையச் செய்கிறது. சூழ்நிலையைப் பற்றி நான் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன், ஆனால் மற்றவர்கள் அவ்வாறு இல்லை. இப்படிப்பட்ட நேரங்களில், என்னால் காரணத்தை புரிந்துக்கொள்ள முடிவதில்லை. மேலும், மற்றவைகள் நியாயமாக இல்லை என்று கருதுகின்றேன்.
செயல்முறை:
மற்றவர்கள் என்னிடம் திருப்தியற்று இருக்கும்போது, என்னை நான் சோதிப்பது அவசியம். தொடர்ந்து என்னை நான் சோதித்து, மாற்றிக்கொள்ளும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலம், காலத்திற்கு ஏற்ப, நான் முன்னோக்கிச் செல்ல முடியும். இது உண்மையான, திருப்தியைக் கொண்டுவரும் – இந்தவிதமான திருப்தியினால், நானும் பாதிப்படைவதில்லை மற்றவர்களும் பாதிக்கப்படுவதில்லை.
12.05.18
இன்றைய
சிந்தனைக்கு
திருப்தி:
திருப்தியுடன்
இருக்கும்
ஒருவர், தானும்
பாதிக்கப்படுவதில்லை,
மற்றவர்களையும்
பாதிப்படையச்
செய்வதில்லை.
சிந்திக்க
வேண்டிய
கருத்து:
நான்
மற்றவர்களை
துன்புறுத்தக்
கூடாது என்று
சிந்தித்தாலும், அநேகமான
முறை, நான்
பேசும்
வார்த்தைகள்,
செயல்கள்
அல்லது
நடத்தையானது
மற்றவர்களை
பாதிப்படையச்
செய்கிறது.
சூழ்நிலையைப்
பற்றி நான்
மிகவும்
சந்தோஷமாக
இருக்கின்றேன்,
ஆனால்
மற்றவர்கள்
அவ்வாறு
இல்லை.
இப்படிப்பட்ட
நேரங்களில், என்னால்
காரணத்தை
புரிந்துக்கொள்ள
முடிவதில்லை.
மேலும், மற்றவைகள்
நியாயமாக
இல்லை என்று
கருதுகின்றேன்.
செயல்முறை:
மற்றவர்கள்
என்னிடம்
திருப்தியற்று
இருக்கும்போது, என்னை
நான்
சோதிப்பது
அவசியம்.
தொடர்ந்து என்னை
நான்
சோதித்து, மாற்றிக்கொள்ளும்
முயற்சியை
மேற்கொள்ளவேண்டும்.
அதன் மூலம், காலத்திற்கு
ஏற்ப, நான்
முன்னோக்கிச்
செல்ல
முடியும். இது
உண்மையான, திருப்தியைக்
கொண்டுவரும் –
இந்தவிதமான
திருப்தியினால்,
நானும்
பாதிப்படைவதில்லை
மற்றவர்களும்
பாதிக்கப்படுவதில்லை.
13.05.18
இன்றைய
சிந்தனைக்கு
சந்தோஷம்:
சந்தோஷமாக
இருக்கும்
ஒருவரால், மற்றவர்களையும்
சந்தோஷப்படுத்த
முடியும்.
சிந்திக்க
வேண்டிய
கருத்து:
நம்முடைய
பெரும்பான்மையான
நேரம், மற்றவர்களை
திருப்திப்படுத்துவதிலும்
அவர்களை
சந்தோஷப்படுத்துவதிலும்
சென்றுவிடுகிறது.
அநேகமான முறை,
நம்முடைய
சிறந்த
முயற்சி
இருந்தும்கூட,
நாம்
செய்ததை
மனிதர்கள்
பெரிதாக
பாராட்டுவதில்லை.
யாரையாவது
நாம் மிகவும்
சிரமபட்டு
திருப்திப்படுத்த
முயற்சி
செய்யும்போது,
நாம்
மனச்சோர்வடைந்து
பாதிக்கப்பட்டிருப்பதை
உணர்கின்றோம்.
செயல்முறை:
நான்
திருப்தியாக
இருப்பதற்கு
நான் செய்யும்
அனைத்தையும்
பற்றி நான்
அறிந்திருக்கும்போது, மற்றவர்களை
திருப்திப்படுத்துவதற்காக
நான் எதையும்
செய்வதில்லை.
நான்
செய்யும் முயற்சியை
பற்றி நான்
திருப்தியாக
இருக்கும்போது,
மற்றவர்களின்
அங்கிகாரத்தை
நான் சார்ந்து
இல்லை. நான்
செய்யும்
அனைத்தையும்
நான்
இரசிக்கும்போது,
நான்
உண்மையில்
சந்தோஷமாக
இருக்கின்றேன்.
நான் அதிகமாக
திருப்தியாக
இருக்கும்போது,
மற்றவர்கள்
என்னுடைய
முயற்சியை
அதிகமாக பாராட்ட
ஆரம்பிப்பார்கள்.
14.05.18
இன்றைய
சிந்தனைக்கு
தைரியம்:
உதவி
பெறுவதற்கு, நமக்கு
முதலில்
தைரியம்
வேண்டும்.
சிந்திக்க
வேண்டிய
கருத்து:
நாம்
கடினமான
ஒன்றில்
ஈடுபடும்போது, பெரும்பாலும், நாம்
ஆரம்பிப்பதற்கு
முன்பாகவே
மற்றவர்களின்
உதவியை
எதிர்பார்ப்பவர்களாக
நாம் இருக்கின்றோம்.
நாம்
எதிர்பார்க்கும்
உதவி நமக்கு
உடனடியாக
கிடைக்கவில்லை
என்றால், நாம்
மனச்சோர்வு
அடையும்
போக்கு
உடையவர்களாக
இருக்கின்றோம்.
மேலும், அந்த
முயற்சியை
நாம்
முற்றிலுமாக
கைவிட்டுவிடவும்
கூடும்.
செயல்முறை:
மற்றவர்களிடமிருந்து
உதவியை நான்
பெறுவதற்கு
முன்பு, எனக்கு
நானே
உதவிசெய்துக்
கொள்ளும்
தைரியம்
இருப்பது
அவசியம்.
என்னுடைய
இலக்கை நோக்கி
நான் முதல்
அடியை
எடுத்து
வைக்கும்போது, மற்றவர்கள்
எனக்கு உதவி
செய்ய
முன்வருவதை
நான்
காண்கின்றேன்.
நான் உதவி
கேட்பதற்கு
தேவையே இல்லை, ஆனால், உதவியானது, என்னை
நோக்கி
வருகிறது.
16.05.18
15.05.18
இன்றைய சிந்தனைக்கு
சுய – கட்டுப்பாடு:
சுய - கட்டுப்பாடு என்பது, அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
காரியங்கள் தவறாகும்போது, பெரும்பாலும், நம்முடைய முதல் எண்ணமானது,
சூழ்நிலையையோ அல்லது சம்பந்தப்பட்ட மனிதர்களையோ கட்டுப்படுத்துவதாக
இருக்கிறது. ஆனால், இவ்விரண்டும் நம் கையில் இல்லாததால், இவ்விதத்தில்
சிந்திப்பதில் வெற்றி நிச்சயமில்லை. இது எதிர்மறையை மட்டுமே அதிகரிக்கும்.
செயல்முறை:
என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றை, கட்டுப்படுத்த நான் முயற்சி
செய்வதைக் காட்டிலும், என்னை நான் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது
அவசியம். எந்த அளவிற்கு அதிகமாக, தொடர்ச்சியான கவனத்தினாலும், சோதிப்பது
மற்றும் மாற்றிக்கொள்வதன் மூலம் என்னை நான் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கிறேனோ, அந்த அளவிற்கு அதிகமாக, அனைத்தும் கட்டுப்பாட்டில்
இருக்கும்.
16.05.18
இன்றைய
சிந்தனைக்கு
திடமான
நோக்கம்:
திடமான
நோக்கம்
வெற்றியைக்
கொண்டுவரும்.
சிந்திக்க
வேண்டிய
கருத்து:
சிரமமான
நேரங்களில், நம்முள்
அதிகமான
எதிர்மறைத்தன்மையை
நாம் அனுபவம்
செய்கிறோம்.
அந்த ஒரு
குறிப்பிட்ட சூழ்நிலையானது,
மிகவும்
பெரிதாக
தெரிவதோடு, அது
எப்போதும்
தொடரப்போவதாக
தென்படுகிறது.
செயல்முறை:
ஆரம்பத்தில்
தெரியும்
அளவிற்கு, சூழ்நிலையானது
அவ்வளவு
சிரமமானதாக
இல்லை என்பதை
நான்
உணர்ந்துகொள்வது
அவசியம்.
மேலும், நேரமானது
நகராமல்
இருப்பதுபோன்று
தென்பட்டாலும்,
அது
தொடர்ந்து
நகர்கிறது – மேலும்
ஒவ்வொரு
புதிய
நிமிடமும்
மாற்றத்திற்காகவும்
வெற்றிக்காகவும்
புதுப்பிக்கப்பட்ட
வாய்ப்பை
கொண்டுவருகிறது.
இந்த புரிந்துணர்வின்
அடிப்படையில்
என்னுடைய
பணியை நான்
திடமான நோக்கத்துடன்
மேற்கொள்வது
அவசியம். அதன்
பிறகு எந்த
சூழ்நிலையையும்
என்னால்
சுலபமாக
சந்திக்க
முடியும்.
17.05.18
இன்றைய
சிந்தனைக்கு
வளைந்துகொடுக்கும்
தன்மை:
பறக்கும்
பறவையானது, அனைத்து
பிரச்சனைகளையும்
கடந்து
செல்கிறது.
சிந்திக்க
வேண்டிய
கருத்து:
பிரச்சனைகள்
நம் மீது
இருக்கும்போது, அது
பெரிய பாரமாக
தெரிகிறது.
அது நம்முடைய
செயல்படும்
ஆற்றலை
பாதித்து, முன்னோக்கிச்
செல்வதை
தடுக்கிறது.
செயல்முறை:
என்னை நான்
ஒரு வானில்
பறக்கும்
பறவையாக கருதும்போது, என்னுடைய
பிரச்சனைகளின்
மேல் பறந்து,
அவற்றை
அங்கிருந்து
கீழே
பார்க்கமுடிகின்றது.
அவை இன்னமும்
கூட கீழே
இருக்கலாம், ஆனால், மேலே
நான்
விடுபட்டு
இருக்கின்றேன்.
மனதை இந்த
அளவிற்கு
வளைந்துகொடுக்கக்
கூடியதாக வைத்திருப்பதே
அனைத்துப்
பிரச்சனைகளுக்கும்
தீர்வு
காண்பதாகும்.
19.05.18
இன்றைய
சிந்தனைக்கு
சந்தோஷம்:
சந்தோஷமாக
இருப்பது
என்பது, முழு
உலகத்திலும்
சந்தோஷ
கதிர்களை
பரப்புவதாகும்.
சிந்திக்க
வேண்டிய
கருத்து:
உண்மையில்
நாம்
சந்தோஷமாக
இருக்கும்போது, நம்முடைய
சந்தோஷமானது,
சூரிய
கதிரை போன்று
முழு
உலகையும்
அடையும் படியாக,
நாம்
சந்தோஷத்தின்
ஸ்வரூபமாக
இருக்கின்றோம்.
இது, நம்முடைய
ஆனந்தத்தை
மற்றவர்கள்
சிறிதளவாவது
அனுபவம்
செய்ய உதவி
செய்கிறது.
செயல்முறை:
நான்
சந்தோஷத்தை
பற்றி
பேசுவதோடு
மட்டுமல்லாமல், அதை
அனுபவிக்கவும்
வேண்டும்.
அதன் பிறகு, அதை நான்
என்னுடைய
ஸ்வரூபத்தில்
கொண்டுவருவது,
அதை நான்
மற்றவர்களுக்கு
கொடுக்க
கூடியதாகவும்,
அவர்களின்
வாழ்க்கையை
அது மாற்ற
வல்லதாகவும்
இருக்க
வேண்டும்.
20.05.18
இன்றைய
சிந்தனைக்கு
மாற்றம்:
ஒருவர்
தனது மனோபாவத்தை
மாற்றிக்கொள்வது
என்பது உலகை மாற்றுவதாகும்.
சிந்திக்க
வேண்டிய
கருத்து:
ஒரு
குறிப்பிட்ட
உறவுமுறையில்
பிரச்சனை இருக்கும்போது, அந்த
நபரை பற்றி
ஆக்கபூர்வமாக
நம்மால் சிந்திக்க
இயலவில்லை.
நம்முடைய
எதிர்மறையான
மனோபாவத்தினால்
உருவாகும்
எதிர்மறையான
சூழலை
விலக்குவது
கடினமாகிவிடுகிறது.
இது உறவுமுறையையும்
சூழ்நிலையையும்
மேலும் மோசமாக்கிவிடுகிறது.
செயல்முறை:
உறவுமுறையை
மேம்படுத்துவதற்கான
ஒரே வழி, அந்த
நபரை பற்றிய
நம்முடைய
சொந்த
மனோபாவத்தை
மாற்றிக்கொண்டு,
ஆக்கபூர்வமான
சூழலை
உருவாக்குவதாகும்.
இந்த
உள்ளார்ந்த
மௌனமான
மாற்றமானது, மனிதர்களில்
சூட்சுமான
அதிர்வளைகளின்
முலம் ஒரு
ஆக்கபூர்வமான
தாக்கத்தை
உருவாக்குகிறது.
என்னுடைய
மனோபாவத்தை மாற்றிக்கொள்வதன்
மூலம், எனக்கும்
மற்றவர்களுக்கும்,
மேலும் ஒரு
அழகான உலகை
நான்
உருவாக்குகின்றேன்.
அங்கு நான்
இருப்பது, மனிதர்களில்
ஒரு
ஆக்கபூர்வமான
தாக்கதத்தை
ஏற்படுத்துகிறது.
21.05.18
இன்றைய
சிந்தனைக்கு
சந்தோஷம்:
உண்மையான
சந்தோஷம்
நம்முள்
இருக்கிறது.
சிந்திக்க
வேண்டிய
கருத்து:
எதிர்மறையான
சூழ்நிலைகளில், நம்முள்
இருக்கும்
சந்தோஷத்தை
விட்டுவிட்டு, வெளியே
தேட
முற்படுகின்றோம்.
நம்முடைய மனதை
அந்த
பிரச்சனையிலிருந்து
விலக்குவதற்காக, தற்காலிகமான
சந்தோஷத்தை
பெற முயற்சி
செய்கின்றோம்
அல்லது, அந்த
சூழ்நிலையிலிருந்து
விலகிவிட
முயற்சிக்கிறோம்.
இந்த இரண்டு
விதமான
முயற்சியும், பிரச்சனைக்கு
தீர்வு காண
நமக்கு
உதவவில்லை.
செயல்முறை:
உண்மையான
சந்தோஷத்தை
அறிய,
எனக்கு
ஆத்மீக
போஷாக்களித்து, எது
எனக்கு
உயிர்கொடுக்கும்
என்பதை நான் கண்டுபிடிக்க
வேண்டும்.
உள்ளார்ந்த
சந்தோஷத்தின்
மூலத்தை நான்
கண்டுபிடித்துவிட்டால், இது
மிகவும்
கடினமான
சூழ்நிலையிலும், ஸ்திரமாகவும்
மாறாததாகவும்
இருக்கும்.
22.05.18
இன்றைய சிந்தனைக்கு
நேர்மறைதன்மை:
எதிர்மறையிலிருந்து நேர்மறையின் பக்கம் கவனத்தை மாற்றுவது என்பதே, நம்பிக்கையளிப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நம்மை எதிர்மறைதன்மை அனைத்து திசைகளிலும் சூழ்ந்துக்கொள்வதால், ஒவ்வொரு
நாளும் நாம் அதிகம் கவலைபடுகின்றோம். நம்முடைய சராசரியான
பேச்சுவார்த்தைகளிள் முழுக்க முழுக்க எதிர்மறைதன்மை நிறைந்திருக்கிறது.
அதனால், நம்மை அறியாது, நாம் வாழ்க்கையில் ஒரு எதிர்மறையான அணுகுமுறையை
கொண்டுள்ளோம்.
செயல்முறை:
மற்றவர்களுடனான என்னுடைய பேச்சுவார்த்தைகள் எதிர்மறையாக ஆகுவதை நான்
அறிந்திருப்பது முக்கியமானதாகும். மேலும் ஆக்கபூர்வமாக இருப்பதற்கு நான்
உணர்வுப்பூர்வமான மாற்றம் கொண்டுவந்து, வாழ்க்கை எனக்கு கொடுப்பதை
பாராட்டுவது அவசியம். எனது வாழ்க்கையில் இருக்கும் எவ்வளவோ நல்ல விஷயங்களை
நான் கருத்தில் கொள்ளவில்லை. நான் ஆக்கபூர்வமானவற்றில் கவனம்
செலுத்தும்போது, அது உற்சாகமளிக்கும் சுற்றுசூழலை எதிர்காலத்திற்கு
உருவாக்கி, என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கிறது.
23.05.18
இன்றைய சிந்தனைக்கு
விட்டு விடுவது:
எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட்டிருப்பது என்றால் கவலையிலிருந்து விடுபட்டிருப்பது என்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக யாராவது ஒருவர் எதையாவது
செய்யும்போது, நாம் சரியானது என்று எதை உணர்கின்றோமோ அதற்கேற்றவாறு அவர்களை
மாற்ற முயற்சிக்ககூடும். நிச்சியமாக, நம்முடைய முயற்சியை அவர்கள்
தடுப்பார்கள். இது கவலையை ஏற்படுத்துகின்றது.
செயல்முறை:
என்னுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக யாராவது நடந்துகொள்வதை நான்
பார்க்கும்போது, அந்த நபர் தனித்தன்மை வாய்ந்தவர் என்று புரிந்துகொள்வது
அவசியம். எந்த நொடியிலும் அவர் புரிந்துகொண்டதற்கு ஏற்ப அவர் நடந்து
கொள்வார். நான் அவரை, ஒரு குறிப்பிட்ட முறையில் நடந்துகொள்ள வேண்டும் என
எதிர்பார்க்க முடியாது. என்னுடைய எதிர்பார்புகளை நான் விட்டுவிடுவதால்,
நான் கவலையிலிருந்து விடுபட்டு இருக்கின்றேன்.
Htm |
24.05.18
இன்றைய சிந்தனைக்கு
மரியாதை:
அனைவருக்கும் மரியாதை கொடுப்பது என்பது சுய-கட்டுப்பாட்டுடன் இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் சில சமயங்களில் நம்முடைய அதிகாரத்தை மற்றவர்களிடம் காட்டும் அவசியத்தை
உணர்வதோடு அவர்களுடைய மரியாதையை வேண்டுகின்றோம். ஆனால், தாராள மனதுடன்
கொடுக்கப்படாத மரியாதை உண்மையான மரியாதை அல்ல. விரைவிலேயே மற்றவர்களையோ
அல்லது அவர்களுடைய நடத்தையையோ நாம் கட்டுப்படுத்த முடியாதிருப்பதை நாம்
காண்கின்றோம். மேலும் குறைவாகவே சாதிக்க முடிகின்றது.
செயல்முறை:
காரியங்களை சிறப்பான வழியில் செய்து முடிப்பதற்கான வழி, அனைவருக்கும்
மரியாதை கொடுப்பதோடு, நம் அனைவரிடமும் இருக்கின்ற தனித்துவமான
பரிசுகளையும், திறமைகளையும் ஏற்றுக்கொள்வதாகும். நான் மற்றவர்களை
மதிக்கும்போது, அவர்களும் என்னை மதிப்பார்கள். இந்த இருதரப்பட்ட மரியாதை
ஒவ்வொருவரையும் புரிந்துகொள்ள உதவி செய்வதோடு அனைவருடைய நன்மைக்காகவும்
நம்மை சேர்ந்து வேலை செய்ய அனுமதிக்கின்றது.
28.05.18
இன்றைய
சிந்தனைக்கு
இனிமை:
உண்மையை
அறிந்துகொள்வதென்றால்
இனிமையை
அனுபவம்
செய்வதாகும்.
சிந்திக்க
வேண்டிய
கருத்து:
எதிர்மறையாக
ஏதாவது
நடக்கும்போது, இந்த
எதிர்மறை
தன்மை
நம்முடைய
சிந்தனையை எதிர்மறையாக
மாற்றுகிறது.
நாம்
சூழ்நிலையை தெளிவாக
பார்ப்பதில்லை, மேலும்
மோசமான
சூழ்நிலைகளுக்கு
பின்னால் மறைந்துள்ள
நேர்மறையான
அம்சங்களை
நாம் பார்க்க
தவறிவிடக்கூடும்.
செயல்முறை:
உண்மையை
அறிந்துகொள்வதென்றால்
ஒவ்வொரு
செயலிலும், சொல்லிலும்
அழகை
வெளிப்பட
வைப்பதாகும்.
உண்மை
என்னுடைய
உள்ளார்ந்த
குணத்தை
பாராட்ட அனுமதிக்கின்றது.
எனவே,
எப்படிப்பட்ட
சிரமமான
அல்லது
சவாலான சூழ்நிலையாக
இருப்பினும்
கூட, நான்
செய்கின்ற
அனைத்திலும்
இனிமையை கொண்டுவருவதற்கு
எனக்கு இது
உதவி
செய்கின்றது.
30.05.18
இன்றைய
சிந்தனைக்கு
கருத்து
பரிமாற்றம்:
மற்றவர்களுடன்
தொடர்பு
கொள்ளும்
கலையை அறிந்தவர்களே
வெற்றியாளர்கள்
ஆவார்கள்.
சிந்திக்க
வேண்டிய
கருத்து:
ஒருவர்
சரியான
முறையில்
நம்மிடம்
நடந்து
கொள்ளாதபோது, அவரை
குறித்து
நம்முடைய
மனோபாவம், நாம்
அவருக்கு
பதிலளிக்கும்
விதம் மற்றும்
நம்முடைய
நடத்தையை
நாம்
மாற்றிக்கொள்ளும்
போக்கு
நம்மிடம்
உள்ளது. நம்மை
நாம் மாற்றிக்கொள்வதற்கு
முன்பு
அடுத்தவர்
மாறவேண்டும்
என நாம்
காத்திருக்கின்றோம்.
அதனால்
நம்மிடமோ
அல்லது அடுத்தவரிடமோ
நம்மால்
மாற்றத்தை
காண முடியவில்லை.
செயல்முறை:
மற்றவர்களுடைய
தனித்துவமான
குணங்களை அறிந்துகொண்டு
அவற்றுடன்
தொடர்புகொள்ளும்
கலையை நான்
அறிந்துகொள்ளும்போது, எப்பொழுதுமே
நான்
வெற்றியாளராக
இருப்பேன்.
அதன்பிறகு
என்னுடைய
சொந்த
வளர்ச்சிக்காக
நான்
மற்றவர்களின்
நடத்தையை
சார்ந்து இருக்க
மாட்டேன்.
ஒவ்வொருவருடைய
நேர்மறையான
அம்சங்களை
என்னால்
பார்க்க முடிவதோடு
அவற்றை
என்னுள்ளும்
கூட அவற்றை
கிரகித்துக்கொள்ள
முடிகின்றது.
அதன்பிறகு, ஒவ்வொரு
தொடர்பிலும்
நான்
அனுபவத்தின்
வருமானத்தை
ஈட்டுகின்றேன்.