இன்றைய சிந்தனைக்கு 11.05.18 -20.05.18



01.06.18

இன்றைய சிந்தனைக்கு
உள்ளார்ந்த வலிமை:
பலவீனங்களிலிருந்து விடுபட்டிருப்பது என்பது தொடர்ந்து முன்னோக்கி செல்வதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
பெரும்பாலான சமயங்களில், நாம் நம்முடைய பலவீனங்களை முறியடித்து, முன்னேற்றம் அடைகின்றோம். ஆனால் சில சமயங்களில், நம்முடைய பலவீனங்களால் நாம் தோற்கடிக்கப்பட்டு பின்னோக்கி செல்வதை நாம் காண்கின்றோம்.
செயல்முறை:
நானும், மற்றவர்களும் நன்மை அடைவதற்கு, எனக்குள் வேலை செய்து கொண்டிருக்கும் பலவீனத்தின் கடைசி சுவடைகூட கண்டுபிடிப்பது அவசியமாகும். பலவீனத்தினுடைய உண்மையான காரணத்தை நான் கண்டுபிடிக்கும்போது, அதன்பிறகு அதை என்னால் அகற்ற முடியும். இவ்விதத்தில் என்னுடைய பலவீனங்களை வெற்றிகொள்வதற்கு தொடர்ந்து நான் வேலைசெய்யும் போது, நான் வலிமையடைவதோடு முன்னேறவும் முடிகின்றது.

02.06.18

இன்றைய சிந்தனைக்கு
உயர்வாக மதித்தல்:
ஒருவருடைய வளங்களை உயர்வாக மதிப்பது, தொடர்ந்து முன்னேற்றத்தை கொண்டுவருகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நம்மிடம் இருப்பதை பாராட்டுவதை விட நம்மிடம் பற்றாக்குறையாக உள்ளதில் கவனம் செலுத்துவது சுலபமாக இருக்கின்றது. நாம் எப்போதெல்லாம் சவாலான சூழ்நிலைகளை சந்திக்கின்றோமோ அப்போது, நம்மிடம் பற்றாக்குறையாக உள்ளதில் மட்டுமே நாம் கவனம் செலுத்தும் போக்கு உள்ளது. நமக்கு இம்மனோபாவம் இருக்கும்போது, நம்மால் எவ்வித முயற்சியும் செய்து சூழ்நிலையை மாற்ற இயலவில்லை. அதன்பிறகு, மற்றவர்களை குறைகூறுவது அல்லது சாக்குபோக்கு சொல்வது போன்ற போக்கு நம்மிடம் உள்ளது.
செயல்முறை:
எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிசுகளை பாராட்டுவதற்கும், பயன்படுத்துவதற்கும் நான் விசேஷ முயற்சி செய்வது அவசியமாகும். இன்று, ஒவ்வொரு சவாலையும் என்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், என்னிடம் மறைந்துள்ள வளங்களை கண்டுபிடிக்கவும் ஒரு சந்தர்ப்பமாக கருதுவேன். இவ்வாறு நான் அதிகமாக செய்யும்போது, நான் அதிகமாக முன்னேறுவதற்கு முயற்சி செய்வேன்.


03.06.18

இன்றைய சிந்தனைக்கு
பகுத்தறிதல்:
சரியான மனோபாவம் உடையவரே சிறந்த பங்களிப்பவர் ஆவார்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
சில சமயங்களில், செயல் சரியானதாக இருப்பினும், தீர்வில் குறை இருப்பதை நாம் காண்கின்றோம். இவ்வாறு நடக்கும்போது, சூழ்நிலைகள் ஏன் சிறப்பாக மாறவில்லை என்று புரிந்துகொள்ள சிரமமாக இருக்கலாம். பதிலை கண்டுபிடிக்காமல் அனைத்தையும் பற்றி நாம் கேள்விகள் கேட்டுகொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். இது சம்மந்தப்படுள்ள நபர்களிடமும், சூழ்நிலையை பற்றியும் எதிர்மறையான மனோபாவத்தை உருவாக்குகின்றது.
செயல்முறை:
என்னுடைய செயல்களுக்கு பின்னால் உள்ள நோக்கத்தைப் பற்றி நான் சிந்தித்து பார்ப்பது அவசியமாகும். எனக்கு சரியான மனோபாவம் இருக்கும்போது, அது ஒரு சக்திசாலியான விதையாக ஆகி, இறுதியில், சரியான நேரத்தில் பலனை தரக்கூடியதாக ஆகின்றது. அதன்பிறகு மற்ற அனைத்து சூழ்நிலைகளும், இவ்விதைக்கு தடைகளையோ அல்லது மேலும் தவறான புரிந்துணர்வையோ உருவாக்குவதற்கு பதிலாக, போஷாக்கு அளிக்கும்.

04.06.18

இன்றைய சிந்தனைக்கு
தன்னலமற்றதன்மை:
தன்னலமற்றதன்மை, சந்தோஷத்தை கொண்டு வருகிறது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
சுய-நலம் இருக்கும்போது, அதில் எப்பொழுதுமே ஒரு ஆசை உள்ளது. இந்த ஆசையினால், நம்மால் திருப்தியை அனுபவம் செய்ய இயலவில்லை. நம்முடைய தேவைகள், எப்பொழுதுமே நாம் பெற கூடியதை விட அதிகமாகவே உள்ளது. நம்முடைய சொந்த ஆசைகளில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தும்போது, நம்மால் கொடுப்பவராகவோ அல்லது மற்றவர்களுடைய நன்மைக்காக வளங்களை பகிர்ந்துக் கொள்ளவோ இயலவில்லை. நாம் கொடுப்பதற்கு கற்றுக்கொள்ளாத வரை, நம்மால் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியாது.
செயல்முறை:
நாம் சுயநலமற்றவராக இருக்கும்போது, என்னுடைய சொந்த வளங்களின் மேல் எனக்கு மரியாதை இருக்கின்றது. அனைவரின் நன்மைக்காக என்னால் அவற்றை பயன்படுத்த முடிகின்றது. மற்றவர்கள் என்னை பாராட்ட வேண்டும் என நான் எதிர்பார்க்காமல் என்னிடம் உள்ளதை பயன்படுத்தியதால், எனக்கு திருப்தி இருக்கின்றது. நான் எடுத்துக்கொள்பவராக இருப்பதற்கு பதிலாக கொடுப்பவராக ஆகும்போது, இது தொடர்ந்து சந்தோஷத்தை கொண்டுவருகின்றது. 

05.06.18

இன்றைய சிந்தனைக்கு
வளைந்து கொடுக்கும்தன்மை:
வளைந்து கொடுக்கும் கலையை அறிந்துகொள்வது என்பது ஒருவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அழகை உருவாக்குவதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
சில சமயங்களில், நம்முடைய வழிமுறைகளில் நாம் சிக்கிக்கொண்டு விடுகின்றோம். நாம் அனைவரும் தனிப்பட்டவர்கள், நம்முடைய சொந்த குணநலன்கள், பண்பாடு மற்றும் ஆசைகளுக்கு ஏற்றவாறு நாம் காரியங்களை செய்கின்றோம். ஆனால் வாழ்க்கையின் அழகை பாராட்டுவதற்கு, காரியங்களை செய்வதற்கு வெவ்வேறான வழிகள் இருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும். நாம் வளைந்து கொடுக்கும்போது, மற்றவர்கள் நமக்கு கற்றுக்கொடுக்கவிருப்பதிலிருந்து நம்மால் அதிகமாக கற்றுக்கொள்ள முடியும்.
செயல்முறை:
வளைந்துகொடுக்கும் தன்மையின் உண்மையான கலை ஒவ்வொருவரையும் தனிப்பட்ட நபராக பாராட்டுவதில் அடங்கியுள்ளது. இந்த பாராட்டு மற்றவர்களுக்கு இயற்கையான மரியாதையை கொண்டுவருகின்றது. மற்றவர்களை தனித்துவமான நபர்கள் என நான் மதிக்கும்போது, என்னுடைய ஆசைகளுக்கு ஏற்றவாறு மற்றவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என நான் எதிர்பார்ப்பதில்லை. மாறாக, அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள முடிவதோடு, உலகைப் பற்றி அவர்களுடைய கண்ணோட்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.



06.06.18

இன்றைய சிந்தனைக்கு
சந்தோஷம்:
சந்தோஷத்தின் போஷாக்கு ஒருவரை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
உண்மையாக சந்தோஷத்துடன் இருப்பது என்பது, சந்தோஷத்திற்காக வெளித் தூண்டுதலை சார்ந்திருக்காமல், உள்ளிருக்கும் சந்தோஷத்தை கண்டுபிடிப்பதில் உள்ளது. உள்ளார்ந்த சந்தோஷத்தின் தொடர்பில் இருக்கின்ற ஒருவரால், அவருடைய வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடிகின்றது. சந்தோஷம் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கின்றது - நாம் சந்தோஷமாக இருக்கும்போது, உடலை பாதிக்கின்ற நோய்களிலிருந்தும் கூட நாம் விடுபட்டு இருக்கின்றோம்.
செயல்முறை:
நான் என்னுடைய உள்ளார்ந்த சந்தோஷத்தின் நிலையை பேணிக்காக்கும்போது, என்னால் அனைத்திலும் உள்ள அழகை ரசிக்க முடிகின்றது. இம்மன நிலையால் என்னுடைய மனம், உடல் மற்றும் உறவுகள் ஆரோக்கியமாக உள்ளன. என்னால் நான் செய்கின்ற அனைத்தையும் ரசிக்க முடிவதோடு தொடர்ந்து முன்னேற்றத்தையும் அனுபவம் செய்ய முடிகின்றது.

07.06.18

இன்றைய சிந்தனைக்கு
பொறுப்பு:
உண்மையான பொறுப்பு, உள்ளார்ந்த இலேசானதன்மையையும் சந்தோஷத்தையும் கொண்டு வருகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் ஒரு காரியத்திற்காகவோ அல்லது ஒரு நபருக்காகவோ பொறுப்பேற்கும்போது, நாம் பாரமாகவோ அல்லது அந்த நபரிடமோ அல்லது சூழ்நிலையிலோ சிக்கிக்கொண்டதாக உணரும் போக்கு நம்மிடம் உள்ளது. இந்நிலையில் நாம் முடக்கப்பட்டவராக உணரும்போது, காரியத்தை இயன்ற அளவு சிறப்பான முறையில் செய்ய இயலவில்லை.
செயல்முறை:
பொறுப்பு என்பது உண்மையில், செய்யவேண்டிய கடமைகள் மட்டுமே அல்ல. ஆனால் அக்காரியத்தில் நேர்மையுடன் பணியாற்றுவதிலும் அனைத்தையும் நோக்கத்தை உணர்ந்து செய்வதிலும் அடங்கியுள்ளது. இந்த மனோபாவத்துடன் நான் பணியாற்றும்போது, காரியங்கள் சுலபமாக நடப்பதையும், ஒவ்வொரு அடியிலும் நான் உதவி பெறுவதையும் காண்கின்றேன். என்னால் அதிக லேசான தன்மையுடன் அதிகமான காரியங்களை செய்ய முடிகின்றது. மேலும் நான் செய்கின்ற அனைத்தையும் நான் ரசிக்கின்றேன்.

08.06.18

இன்றைய சிந்தனைக்கு
பற்றற்றதன்மை:
பற்றற்று இருக்கும் ஒருவருக்கு சவால்கள் கூட விளையாட்டாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் பற்றற்று இருக்கும்போது, நாம் சூழ்நிலையில் உணர்வுபூர்வமாக ஈடுபடுவதில்லை. பற்றற்றதன்மை, சிரமமான சூழ்நிலையில் நிலைகலங்குவதை அல்லது குழப்பமடைவதைக் காட்டிலும், அமைதியாக இருப்பதற்கு நமக்கு உதவுகின்றது. எவ்விதமான சூழ்நிலையையும், எவ்வளவு சிரமமாக இருப்பினும், ஒரு விளையாட்டை கவனிப்பதை போன்றே நாம் கவனிப்பதற்கு நமக்கு சக்தி அளிக்கின்றது.
செயல்முறை:
நான் ஆதரவின்றி உணரும் எந்தவொரு சூழ்நிலையிலும், நான் பற்றற்று இருக்கும் சக்தியை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். நான் சூழ்நிலையை, ஒரு நாடகத்தை பார்ப்பதை போல பார்ப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும். அதன்பிறகு நான் கதையில் நிகழ்கின்ற வெவ்வேறான காட்சிகளை பார்க்கும்போது நான் லேசாக உணர்வதோடு, என்னால் இரசிக்கவும் முடிகின்றது. நான் இருக்கின்ற சூழ்நிலைகளில் நான் சிக்கிக்கொண்டிருப்பதாக இப்போது உணரவில்லை; மாறாக, அவற்றை என்னால் அறிவுபூர்வமாக அணுக முடிகின்றது.
 
09.06.18

இன்றைய சிந்தனைக்கு
பாராட்டு:
தனிப்பட்ட ஒவ்வொருவரினுடைய மதிப்பை பாராட்டுவது என்பது தகுதிவாய்ந்தவராக ஆகுவதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நம்முடைய சாதனை அல்லது நம்மை மற்றவர்கள் எந்தளவு பாராட்டுகின்றார்கள் என்பதை வைத்து நம்முடைய மதிப்பை கணக்கிடும் போக்கு நம்மிடம் உள்ளது. இது நம்முடைய சுய–மதிப்பிற்காக நம்மை வெளிப்புற சூழலை சார்ந்திருக்க செய்கின்றது. வெளியிலிருந்து வருவது எப்போதும் நிலையில்லாமல் இருப்பதால் நம்முடைய எண்ணங்களும் நிலையற்று இருப்பதை நாம் காண்கின்றோம். சில சமயங்களில் நாம் சந்தோஷமாக இருக்கின்றோம், சில சமயங்களில் சந்தோஷமாக இல்லை.
செயல்முறை:
ஒவ்வொரு நபரிடமும் தனக்கென சொந்தமான தனிப்பட்ட திறமைகள் இருக்கின்றன என்பதை நான் புரிந்துகொள்வது அவசியமாகும். நான் என்னுடைய சொந்த உள்ளார்ந்த மதிப்பை அறிந்துகொள்ள இயலும்போது, என்னால் என்னுடைய திறமைகளையும் ஆற்றல்களையும் சிறப்பாக பயன்படுத்த முடியும். நான் எந்த அளவு திறமைவாய்ந்தவர் என்பதை நான் உணர்வேன், மேலும் என்னைப்பற்றி நான் நன்றாக உணர்வதற்கு மற்றவர்களின் உறுதிமொழி எனக்கு இப்போது தேவைப்படவில்லை.